நீதி அநீதி என்பது
உனக்கும் எனக்குமான
வித்தியாசமா முகவரிகள்
உனக்கும் எனக்குமான
வித்தியாசமா முகவரிகள்
மனிதம் மரிப்பது உனக்கு
நீதியாய் இருந்தால்
அநீதி என்று சொல்வதில்
நான் அடங்கப்போவதில்லை
அரசியலுக்காய் நான்
கவிதை எழுதவில்லை
கவிதை எழுதுவதற்காய்
நான் அரசியல் பேசவில்லை
ஒற்றைக் கண்ணால்
பார்த்துக் கொண்டு
நியாயம் பேசமுடியாது
மரிப்பவன் யாராய்
இருந்தாலும்
மரணம் கொடுப்பதற்கு
நீ யார்?
முதலில் மனிதராக
நாங்கள் இருக்க வேண்டும்
பின்பு தமிழராக
இருப்பது பற்றி சிந்திக்கலாம்
புரிகிறதா அல்லது
கோபம் வருகிறதா
மனிதராவோமா அல்லது
மிருகமாவேமா?